பிரிட்டன் விமான சேவைக்கு தடையை நீட்டிக்க முடிவுகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்கள், மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான, தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும், 'வந்தே பாரத்' திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில், பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, பிரிட்டனில், புதிய மாற்றங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியது. இதையடுத்து, இந்தியா - பிரிட்டன் இடையிலான விமானங்கள், கடந்த, 23ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த விமான சேவைகளுக்கான தடை, நாளை வரை உள்ளது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நேற்று கூறியதாவது:பிரிட்டனில், புதிய குணாதிசயங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, மேலும் நீட்டிக்கப்படலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது தொடர்பான அடுத்த கட்ட பேச்சை, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நடத்த, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE