புதுக்கோட்டை: வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். சென்னை சென்றதும் அவரை சந்திப்பேன். ஆன்மிகத்தை ஏற்று கொள்ளுங்கள் என யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. பகுத்தறிவை ஏற்று கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. ஆனால், ஆன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை. அனைவருக்கும் சொந்தம்.

நேர்மையான அரசியலில் ஈடுபட்டேன் என்பது என் கல்லறையில் இருந்தால் போதும். விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி பாராமுகமாக இருப்பது சரியல்ல. விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE