அருப்புக்கோட்டை : மல்லாங்கிணரில் மதுரை பாண்டியநாட்டு வரலாற்று மையத்தின் சார்பாக 'பாண்டியநாட்டு வரலாற்று தடயங்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் செல்லப்பாண்டியன் வரவேற்றார்.தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆர்வலர் ராஜேந்திரன், பேராசிரியர் ரவிச்சந்திரன், அரசு தொல்லியல் துறை அலுவலர் ஆசைதம்பி பேசினர்.அமர்வுகளை பேராசிரியர்கள் லட்சுமணமூர்த்தி, கந்தசாமி நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE