விருதுநகர் : தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறி, பழங்கள் கொள்முதல் செய்து கிராமங்கள், நகரங்களில் விற்பனை செய்ய 10 பேருக்கு நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகளை வழங்கி கலெக்டர் கண்ணன் துவக்கி வைத்தார்.
அப்போது பேசியதாவது: மாவட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நடமாடும் தள்ளுவண்டிகளுடன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.4.5 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கும், விற்பனையாளர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், விவசாய நேர்முக உதவியாளர் சங்கர் நாராயணன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE