ஊட்டி : ஊட்டியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற, 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டியில், மனித நேய ஜனநாயக கட்சி சார்பில், 'வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,' என, வலியுறுத்தி, மாவட்ட தலைவர் கமாலுதீன் தலைமையில், கட்சியினர், ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். 54 பேரை போலீசார் கைது செய்தனர்.* ஏ.டி.சி., யில், சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் சந்திரன் தலைமையில்,'மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும்,' என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE