குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் சுகாதார துறையில் கொரோனா பணிக்காக,'டேட்டா என்ட்ரி' செய்ய கல்லுாரி முடித்த பெண்கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி, பர்லியார் உட்பட சோதனைச்சாவடிகளில் பணியாற்றினர்.
கொரோனா அச்சத்திலும் தங்களை அர்ப்பணித்து பல இடங்களுக்கு சென்று பணியாற்றினர். இவர்களுக்கு முறையாக, சம்பளம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 'பணிக்கு வரவேண்டாம்,' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அளித்த புகாரை தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உறுதி அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE