சிவகங்கை : சிவகங்கையில் ஜே.சி.ஐ., 36வது பதவியேற்பு விழா நடந்தது.
தலைவராக தனபாலன், செயலராக பாலதண்டாயுதம், பொருளாளராக கிருஷ்ணகுமரேஷ் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்க தலைவர் அருளானந்தம், மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், வாணிப கழக மாவட்ட மேலாளர் தவச்செல்வம், முன்னாள் மண்டல தலைவர் ஆனந்த், முன்னாள் தேசிய துணை தலைவர் ராமநாதன், மண்டல துணை தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர். செயலர் பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE