கூடலுார் : மசினகுடி அருகே, காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காட்டுயானை, மாவனல்லா சாலையோரம் முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
முதுமலை பொக்காபுரம் அருகே, முதுகில் காயத்துடன் சிரமப்பட்ட காட்டு யானைக்கு, கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் இரு தினங்களுக்கு முன், சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, நள்ளிரவு மாவனல்லா குடியிருப்பு பகுதியில் யானை நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர், அதனை விரட்டினர். வனத்துறையினர் கூறுகையில், 'சிகிச்சைக்கு பின், யானை நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்; மக்கள் அச்சப்பட தேவையில்லை' என, கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE