கொரோனா பரவல் காரணமாக, அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கைவிட்டார். இதற்காக, தமிழக மக்கள் உள்ளிட்ட அனைவரிடமும், நேற்று முன்தினம், கடிதம் வாயிலாக மன்னிப்பு கேட்டார்.
மூன்று ஆண்டுகளாக, கட்சி துவங்குவதற்கான மக்கள் மன்ற பணிகளில், தீவிரமாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினி தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, அவரது ரசிகர்கள் பலர், நேற்று முன்தினம் போயஸ் கார்டனில், ரஜினி வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும், ரஜினி வீட்டு முன் திரண்ட ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து கோஷமிட்டனர்.
'தலைவா வா' என கோஷமிட்ட அவரது ரசிகர்கள், போயஸ் கார்டன் வாசலிலேயே படுத்துக் கொண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE