காந்திய மக்கள் இயக்க தலைவர், தமிழருவி மணியன் அறிக்கை:
மாணிக்கத்திற்கும், கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில், இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும், துாய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத, அரசியல் களத்திலிருந்து,முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.எந்தக் கைம்மாறும் கருதாமல், சமூக நலனுக்காக, என்னுடன் கைகோர்த்து நடந்த, காந்திய மக்கள் இயக்கம் நண்பர்களின் அடிதொழுது, நான் விடைபெற்றுக் கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை, நான் அரசியலில், மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.இவ்வாறு, தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE