ராமநாதபுரம் : மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தில் 15 இடங்களில் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் புறநகர் பணிமனை முன் பாஸ்கரன்தலைமையிலும், நகர் கிளை முன்பு ஜெயக்குமார் தலைமையிலும் நடந்தது.மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன், செந்தில் பங்கேற்றனர்.சிக்கல் பஸ்ஸ்டாப் அருகே பச்சமால் தலைமையில் நடந்தது. உப்பு நிறுவன சங்க செயலாளர் குமரவடிவேல், வர்த்தக சங்க செயலாளர் இலியாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.பரமக்குடியில் முரளி தலைமையில், மாவட்ட நிர்வாகி ராஜா, மத்திய சங்க தலைவர் ராஜன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கமுதியில் மாவட்ட பொருளாளர் முத்து விஜயன், உள்ளாட்சி சங்க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையிலும், போக்குவரத்து பணி மனை முன்பு லுார்துசாமி தலைமையிலும், ராமேஸ்வரம்,ஆண்டித்தேவன் வலசை,சுப்புத்தேவன் வலசையில் லோடுமேன் சங்கம் சார்பில் நடைபெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE