மேட்டுப்பாளையம் : காரமடையில் மொபைல் போன் திருடிய, இரண்டு சிறுவர்களை போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
காரமடை ஆர்.வி., நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் குழந்தைகளுக்கு எழுது பொருள் வாங்க, மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார். தனது மொபைல்போனை, மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்து விட்டு, கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு சிறுவர்கள், மோட்டார் சைக்கிள் கவரில் இருந்த, மொபைல்போனை எடுத்துக் கொண்டு ஓடினர். இதை பார்த்த ஜெயமுருகனும், அக்கம் பக்கத்தினரும், சிறுவர்களையும் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.காரமடை போலீசார் விசாரித்தபோது, திருப்பூரை சேர்ந்த, 16 வயது சிறுவனும், கோவையை சேர்ந்த, 17 வயது சிறுவனும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும், போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE