சூலூர் : 'பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரை, சூலூர் ஒன்றிய பகுதிகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, யூனியன் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
சூலூர் யூனியன் கவுன்சில் கூட்டம், சேர்மன் பாலு தலைமையில் நேற்று நடந்தது. வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரி கவுன்சிலர்கள் பேசினர்.பி.ஏ.பி.,வாய்க்கால் தண்ணீரை, சூலூர் ஒன்றிய பகுதி கிராமங்களான பட்டணம், பீடம்பள்ளி, கலங்கல், காங்கயம் பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE