மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கணியூரில், ஹிந்து முன்னணியினர், சாலை மறியல், போராட்டத்தில், ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள பத்மகிரீஸ்வரர் கோவிலில், கிரிவலம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுததுள்ளனர். இதை கண்டித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அக்கோவிலுக்கு செல்ல முயன்ற போது, அவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள, ஹிந்து முன்னணியினர் கணியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முக்கிய வழித்தடமான கணியூர்-தாராபுரம் ரோட்டில், அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மடத்துக்குளம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மடத்துக்குளம் போலீசார் அவர்களை கைது செய்து விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE