வால்பாறை : வால்பாறை ைஹபாரஸ்ட்டில், பணி நிறைவு பெற்ற போஸ்ட் மாஸ்டருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.
வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில், கிராம அஞ்சலக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தகுமாரி. இவர் கடந்த, 33 ஆண்டுகளாக தபால்துறையில் பணிபுரிந்து வருகிறார்.வசந்தகுமாரி பணிக்காலம் இன்று (31ம் தேதி) நிறைவடைகிறது. வால்பாறை நகர் தலைமை தபால் நிலையத்தில், பிரிவு உபச்சார விழா நடந்தது. போஸ்ட் மாஸ்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். அய்யர்பாடி போஸ்ட் மாஸ்டர் அழகுராஜ் வரவேற்றார். விழாவில், கிராம அஞ்சலக அதிகாரிகள், போஸ்ட் மேன் உட்பட பலர் கலந்து கொண்டு, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE