ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப், ஆழியாறு பூங்கா, குரங்கு அருவிகளில் திறக்கப்பட்டு, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர், ஆழியாறு, ஆனைமலை, பொன்னாலம்மன்துறை தடுப்பணைகளில் குளிக்கின்றனர்.இந்நிலையில், நாளை, புத்தாண்டை முன்னிட்டு, தடுப்பணைகளில் பெருங்கூட்டமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கவும், போலீசார், பொதுப்பணித்துறையினர் தடுப்பணைகளில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அத்துமீறி நுழைவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE