மதுரை : மதுரை காமராஜபுரம் சப்பாணி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:எனது மகன் பூமிநாதன் 2019ல் மலேசியா சென்றார்.
அவரது பாஸ்போர்ட்டை ஒரு ஏஜன்டிடம் ஒப்படைத்தார். பின் பூமிநாதனிடம் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. அவர் வனத்திலுள்ள ஒரு பண்ணையில் வேலை செய்தார். அவரை அங்கு கொத்தடிமைபோல் சிலர் தடுத்து வைத்துள்ளனர். பூமிநாதனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். எனது மகனை மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். மகனை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் அமர்வு, 'மனுவை மத்திய, மாநில அரசுத் தரப்பில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஜன.,20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE