திருப்பூர் : அரசு பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதி முழுவதையும் கொரோனா தடுப்பு பணிக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதியுதவி உடன் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் பராமரிப்பு நிதி, பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், 100 மாணவர்கள் வரையுள்ள பள்ளிகளுக்கு தலா, 25 ஆயிரமும், 250 மாணவர் உள்ள பள்ளிகளுக்கு தலா, 50 ஆயிரமும், ஆயிரம் மாணவர் உள்ள பள்ளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், இத்தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பயன்படுத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கான முககவசம், சானிடைசர், தெர்மா மீட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், தானியங்கி கிருமிநாசினி இயந்திரம், பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்த தேவையான தெளிப்பான்கள் தருவிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE