பல்லடம் : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா, காரணம்பேட்டை அருகே சங்கோதிபாளையத்தில் நடந்தது. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.மாவட்ட செயலாளர் தங்கராஜ், மற்றும் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பல்வேறு கட்சிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்டோர், பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருண், மேற்கு மண்டல தலைவர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், சண்முகவேல், ஆறுச்சாமி, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE