அவிநாசி : விளை பொருட்களின் ஏல மையமாக அவிநாசி மாறி வருவது, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அவிநாசி - கைகாட்டிப்புதுாரில் உள்ள அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், (ஏ.சி.எம்.எஸ்.,) வாரந்தோறும், புதன்கிழமை, பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது.இரு மாதமாக, பிரதி வியாழன் தோறும், கொப்பரை ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பிரதி திங்கள் தோறும், நிலக்கடலை ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.தேங்காய் ஏலம்புத்தாண்டு முதல், புதுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதி புதன்தோறும், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. அதன்படி, அடுத்த மாதம், 6ம் தேதி, ஏலம் நடத்தப்பட உள்ளது.
'தரம் பிரிக்கப்பட்ட தேங்காய், காலை, 8:00 மணிக்குள்ளும், தரம் பிரிக்கப்பட்ட தேங்காய் பருப்பு, காலை, 9:00 மணிக்குள்ளும் ஏல மையத்திற்கு, விவசாயிகள் எடுத்து வர வேண்டும். விவசாயிகளின் விளை பொருளுக்கான தொகை, உடனுக்குடன் வழங்கப்படும்,' என, திருப்பூர் மாவட்ட விற்பனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE