திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இலவச நீட் பயிற்சிக்கு கடந்தாண்டை விட இரண்டு மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 24 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் அரசு பள்ளியில் பயின்ற 9 மாணவர்களுக்கு, அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது.இது மருத்துவராகும் கனவோடு இருக்கும் மாணவர்களிடம் புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்கள் 475 பேர் இலவச நீட் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு 230 பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு 'இ-பாக்ஸ்' நிறுவனம் மூலம் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE