கோவை:சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, கார் டிரைவருக்கு கோவை, 'போக்சோ' கோர்ட் ஆயுள்சிறை விதித்தது.
கோவை, கே.கே.புதுாரை சேர்ந்த பாலன்,51, என்பவர், பள்ளி குழந்தைகளை சொந்த காரில் அழைத்து சென்று வந்தார். 2017ல், ஐந்து வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்றபோது தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்தார்.சிறுமியின் தாயார் அளித்த புகாரில், பாலனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட பாலனுக்கு ஆயுள்சிறை, 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றிய வாகனத்தை அரசிடம் ஒப்படைத்து, அதிலிருந்து கிடைக்கும் பணம், அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசு சார்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE