கொச்சி:கேரளாவில், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை தனி செயலராக இருந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.சிவசங்கர்.பரபரப்பை ஏற்படுத்திய, 30 கிலோ தங்க கடத்தல் வழக்கில், சிவசங்கருக்கு தொடர்பிருப்பதாக வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
இவரது ஜாமின் மனு, எர்ணாகுளம் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், 'சிவசங்கருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைப்பதுடன், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார்' என, வாதிட்டார். அதனை ஏற்ற நீதிபதி, ஜாமின் வழங்க மறுத்து சிவசங்கரின் மனுவை தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட, 15 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE