கோவை : வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த நவீத்,35,கோவை வந்தார். இங்கிருந்து பெங்களூரு செல்வதற்காக, கோவை ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு வரிசையில் நின்றார். அப்போது அவரது மொபைல் போன் திருட்டு போனது. கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.'சிசிடிவி கேமராவில், வாலிபர் ஒருவர் திருடியது தெரிந்தது. அந்நபர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த காதர் மீரான்,36 என்ற அவரிடம், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE