கிருஷ்ணகிரி:கோவையை சேர்ந்தவர், தங்க நகை வியாபாரி அஸ்வின்குமார், 38; தங்கத்தை குறைவான விலைக்கு தருவதாக, அவரை, மர்ம கும்பல் ஒன்று கிருஷ்ணகிரிக்கு வரவழைத்தது. காரில், அஸ்வின்குமார் உள்ளிட்ட மூவர், திருவண்ணாமலை சாலை பனகமுட்லுவில் உள்ள, தனியார் கல்லுாரி அருகே வந்துள்ளனர்.
அஸ்வின்குமாரிடம் இருந்து, 95.43 லட்சம் வாங்கிக்கொண்டு, தங்கத்தை எடுத்து வருவதாக கூறி சென்றவர்கள் வரவில்லை.புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜசேகர் செட்டியார், நாகர்கோவிலை சேர்ந்த சி.எஸ்.ஐ., சர்ச் பாஸ்டர் மார்டின், கார் ஓட்டுனர் ராஜசேகர் உள்ளிட்ட ஏழு பேர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE