மதுரை : மதுரையில் அரசு கைத்தறி மற்றும் துணிநுால் துறையின் கைத்தறிஆதரவு திட்டத்தின் கீழ் சிறப்பு தள்ளுபடி பட்டு, கைத்தறி கண்காட்சி, விற்பனை ஜடாமுனி கோயில் தெரு எல்.என்.எஸ்., இல்லத்தில் துவங்கியது.
டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி துவக்கி வைத்தார். துறை இணை இயக்குனர் மகாலிங்கம், உதவி இயக்குனர்கள் மீனாகுமாரி, திருவாசகர், ராஜேந்திரன், செல்வி செந்தாமரை, ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான துாயபட்டு சேலைகள் உற்பத்தி விலைக்கும் குறைவாக விற்கப்படுகிறது. இந்தாண்டு விற்பனை இலக்கு ரூ.225 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE