புதுடில்லி : 'கொரோனாவால் சர்வதேச விமான சேவைகளுக்கான ரத்து ஜன. 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது' என விமான ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாட்டின் சர்வதேச விமான சேவை மார்ச் 23ல் நிறுத்தப்பட்டது. மே மாதம் 'வந்தே பாரத்' சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. ஜூலை முதல் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 24 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவியதால் அந்நாட்டிற்கான விமான போக்குவரத்து ஜன.7 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

'சர்வதேச விமானங்கள் ரத்து கொரோனா பாதிப்பால் ஜன. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என விமான ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE