புதுச்சேரி; புதுச்சேரி எலைட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் கடும் குளிரில் வாடும் தெருவோரவாசிகள், நரிக்குறவர்கள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு போர்வை வழங்கப் பட்டது.குகன் தலைமை தாங்கினார். எலைட்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் குணசேகரன், செயலர் பச்சைநாயகம் தெருவோரவாசிகள், நரிக்குறவர்கள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு போர்வை வழங்கினார்.தொடர்ந்து கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் குணசேகரன், நிர்வாகிகள் சுந்தரவரதன், இளங்கோ, பாரதி, ஜெயக்குமார், கமலக்கண்ணன், சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE