உளுந்நுார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் தலைமையில் இட ஒதுக்கீடு கோரி பேரணி மற்றும் பி.டி.ஓ., அலுவலரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.உளுந்துார்பேட்டை தொகுதி பா.ம.க., சார்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பேரணி மற்றும் பி.டி.ஓ., அலுவலரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் தலைமை தாங்கி உழவர் சந்தை அருகே பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் உழவர் சந்தையில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம், விருத்தாசலம் சாலை வழியாக சென்று உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., பன்னீர் செல்வத்திடம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு வழங்கினர்.ஒன்றிய செயலாளர்கள் பழனி, நடராஜ், கார்த்திகேயன், ராஜதுரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் மணிராஜ், மாவட்ட நிர்வாகிகள் நேரு, பாண்டியன், நகர பொறுப்பாளர் ராஜகணபதி, நிர்வாகிகள் முருகன்,ராஜேந்திரன், இளையராஜா, அய்யாசாமி, பிரகாஷ், பாலு, பாலகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிர்வாகி சாமி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE