மயிலம்; கூட்டேரிப்பட்டில் தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சங்க மாநில நிர்வாகி ரத்தினம், வட்டார தலைவர்கள் முருகன் இளவரசன், சுலோச்சனா முன்னிலை வகித்தனர்.சின்னதுரை வரவேற்றார்கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், சம்பளத்தில் பிடித்தம்செய்த தொகையை திரும்ப வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் நிர்வாகிகள் இளையராஜா, நீலமேகம், சங்கர், கம்சலா, வினோத், வள்ளி, சுமதி, சாந்தி, மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE