மரக்காணம்; ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சார்பில் சிறு காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் வானுார் அருகே உள்ள இரும்பை கிராமம் மகாளீஸ்வரர் கோவில் வளாகத்தில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவிற்கு ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுனர் பாலாஜிபாபு தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன், வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரோட்டரி உறுப்பினர்கள் செய்தனர்.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE