விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில், மத்திய அரசின் விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி, கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம், கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக காங்., நிர்வாகிகள், புதிய பஸ் நிலையம் அருகிலிருந்து டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர் கலப்பையை ஏந்தி பேரணியாக வந்தனர்.மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன், நாராயணசாமி, குப்பன், மாநில இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லிகுப்பம் திலகர், சேவாதள தலைவர் ராஜேஷ், மாநில பொதுக்குழு சிவா கண்டன உரையாற்றினர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் சுரேஷ்ராம், பொது செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், மணிகண்டன், இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம், அமைப்பு சாரா தலைவர் வேலு, நகர நிர்வாகிகள் நடராஜன், வாசுதேவன், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், மகளிரணி பரிமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE