உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொ டர்பாக 29 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா இருந்தை கிராமத்தில் முருகன் கோவில் குளம் அருகே கருமகாரியம் செய்யும் இடம் தொடர்பாக இந்து ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை 11:00 மணி அளவில் இது தொடர்பாக இருதரப்பு இடையே பிரச்னை ஏற்பட்டு மோதிக்கொண்டனர்இது குறித்து இருந்தை வீரபாண்டியன்,30: புகாரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் பிச்சை அந்தோணிராஜ், அற்புதராஜ், ஜக்கு, ஜெரால்ட்கிறிஸ்டி, அந்தோணிசாமி, அருள்தாஸ் உள்ளிட்ட 16 பேர் மீதும்,பிச்சைஅந்தோணிராஜ் புகாரில் வீரபாண்டியன், கண்ணன், ரத்தினம், சுப்ரமணி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE