கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அருகே விவசாயக் கிணற்றில் வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் கிராமத்தைச் சேர்ந்த லுார்துமேரியின் மகன் பிரகாஷ்(25),சென்னையில் கூலி வேலைசெய்துவந்த இவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஒதியத்துார் வந்திருந்தார்.பண்டிகை முடிந்த பின்னும் வேலைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனால் கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச்செல்லும் படி கூறியுள்ளனர்.இதனையடுத்து பிரகாஷ் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.கடந்த இரண்டுநாட்களாக வீட்டிற்கு திரும்பாத பிரகாஷை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.நேற்று காலை 9:30மணி அளவில் ஒதியத்துார் பகுதியில் உள்ள ஜெகராஜ் என்பவரின் விவசாயக்கிணற்றில் பிரகாஷின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார்வழக்குப் பதிந்து , பிரகாஷின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE