சின்னசேலம்; சின்னசேலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் சிமென்ட் தளம் அமைக்கப்படாததால் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாகவும், வெய்யில் காலங்களில் புழுதியும் பறப்பதால் டிரைவர்கள், பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் செல்லும் சாலை அருகே அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து, 40க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்னை, கச்சிராயபாளையம், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக பணிமனை முழுதும் சேறும் சகதியுமானது. வெய்யில் காயும் போது, உள்ளே பஸ்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது.இதனால், டிரைவர்கள் டிரைவர்கள், பணிமனை ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.எனவே, அரசு பணிமனையில் சிமென்ட் தளம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE