கள்ளக்குறிச்சி; புக்கிரவாரியில் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி, சிறுமங்கலம் காட்டுகொட்டாய் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் 2 கி.மீ., தொலைவில் உள்ள புக்கிரவாரி கிராமம் வழியாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர குறுக்கே உள்ள ரயில் பாதையைக் கடந்து செல்வதால் விபத்து அபாயம் இருந்தது. இதையொட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கல்குட்டைக்கு அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.மழைக்காலங்களில் கல்குட்டையில் தேங்கும் தண்ணீரினால் ஊற்று எடுத்து சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் அப்பகுதி மக்கள் பழையபடி ரயில் பாதையைக் கடந்து ஆபத்தான நிலையில் செல்கின்றனர். சுரங்கப்பாதை கட்டியும் பயனின்றி உள்ளது.மேலும், விளைபொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சாத்தனுார் வழியாக 5 கி.மீ., சுற்றி கள்ளக்குறிச்சிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.பல லட்சம் ரூபாய் மதிப்பில் சுரங்கப்பாதை கட்டப்பட்டும், அதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரினை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்காதபடி நிரந்தர தீர்வு கண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE