ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு முன்புறம் உள்ள குளம் தண்ணீர் இன்றி புதர் மண்டியுள்ளது.குளத்தின் கரைப்பகுதியில் மண் பிடிப்புத் தன்மை இல்லாததால், அவ்வப்போது சரிவு ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கருங்கற்களால் ஆன சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.குளத்திற்கு இறங்கிச் செல்லும் வகையில் படிக்கட்டுகள் இன்றி செங்குத்தாக கட்டப்பட்டது.இந்நிலையில், கடந்த 4ம் தேதி பெய்த கனமழையால் குளத்தின் சுவர் சரிந்து, விழுந்தது. மேலும், மண் சரிவு ஏற்பட்டதால், அருகில் உள்ள 4 குடும்பத்தினர் பாதுகாப்பாக, வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தற்காலிகமாக தடுப்பு அமைக்கப்பட்டது.தொடர்ந்து குளத்தை சீரமைப்பதற்கான பணிகள் இதுவரை மேற்கொள்ளவில்லை.மழை பெய்தால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் படிக்கட்டுகளுடன் சுற்றுச் சுவர் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE