நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.,பாரி சர்க்கரை ஆலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்தது.கூட்டத்தில் ரவிக்குமார், சுப்ரமணியம், ராமலிங்கம், தென்னரசு, ஜெயமூர்த்தி, ஜெயதேவ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் கரும்பு சட்டத்தில் கரும்பில் ஒரு சதவீதம் மட்டுமே கழிக்க வேண்டுமென கூறியும் ஈ.ஐ.டி.பாரி ஆலையில் 10 சதவீதத்துக்கு மேல் கழிவு செய்த தொகையை திருப்பி அளிக்கவேண்டும்.தமிழக அரசு கரும்புக்கு அறிவித்த ஊக்க தொகையை உடனடியாக பெற்று தர ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE