கடலுார்; காங்., கட்சியின் தொடக்க விழா கடலுார் வடக்கு மாவட்ட காங்., சார்பில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.கடலுார் டவுன்ஹால் அருகே நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியேற்றினார். பின், ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நெல்லிக்குப்பம் நகர தலைவர் திலகர், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்திராஜ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வேலுசாமி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், வக்கீ்ல் செங்கேணி, சிவக்குமார், அருள் கிேஷார்குமார், ரமேஷ், செல்வகுமார், நகர செயலாளர் கோபால், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE