திட்டக்குடி; ராமநத்தம் அடுத்த பெரங்கியம் பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மங்களூர் ஒன்றியம் பெரங்கியம் புதிய காலனி பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை 7.30மணிக்கு காலிக் குடங்களுடன் ராமநத்தம் - திட்டக்குடி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஊராட்சிதலைவர் செல்லமுத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.பைப்லைனில் ஏற்பட்ட பிரச்னை நேற்றுமுன்தினம் இரவு சரி செய்தும் , குடிநீர் ஏற்றாததால், விநியோகம் செய்யவில்லை எனத்தெரிந்தது. பின்னர் நீரேற்றம் செய்து வினியோகம் செய்தனர். இந்த போராட்டத்தால் ராமநத்தம்- திட்டக்குடி சாலையில் 7.30 முதல் 7.50வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE