கடலுார் - கடலுார் மாவட்டத்தில், நேற்று 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 642 பேர். நேற்று 20 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 662 ஆனது.மேலும் 13 பேர் குணமடைந்ததால், இதுவரை 24 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 104 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 444 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்து இறந்தவர்கள் 283 பேர்; நேற்று இறப்பு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE