மணவாள நகர் - திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், 2,833 பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்கள் நேற்று வழங்கப்பட்டன.திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், 1,244 மாணவர்கள், 1,589 மாணவியர், என, 2,833 மாணவர்கள், 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.மணவாள நகர், கே.இ.நடேசன் செட்டியார் பள்ளியில் நடந்த விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிசெல்வி முன்னிலை வகிக்க, கலெக்டர் பொன்னையா, தலைமை வகித்தார். விழாவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், மற்றும் தமிழ் மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் ஆகியோர், மாணவ - மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.கடம்பத்துார் ஒன்றிய தலைவர் சுஜாதா, ஒன்றிய அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE