மணவாள நகர் - மணவாள நகர் அருகே, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 450 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், சகோதரர்கள் இருவரை கைது செய்தனர்.திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் பகுதியில், கடை ஒன்றில், மணவாள நகர் போலீசார் சோதனை செய்தபோது குட்கா விற்பனை செய்தது தெரிந்தது.இதையடுத்து, கடை உரிமையாளர் கணேசன் மகன் ராஜாராம், 31, என்பவரிடம் நடத்திய விசாரணையில், கோமதி நகரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, மணவாள நகர் போலீசார், அந்த வீட்டிற்கு சென்று, 450 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாய் இருக்கும் என, மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து, வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், ராஜாராம், 31 மற்றும் அவரது சகோதரர் சுயம்புலிங்கம், 30, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE