மதுராந்தகம்; மதுராந்தகம் சுற்றி உள்ள கோவில்களில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர்பீட பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.மேல்மருவத்துாரில், பக்தர்களிடம் பிரசித்தம் பெற்ற, சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. சித்திரை பவுர்ணமி, தைப்பூசம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாடு முடிந்து, திரும்ப செல்லும்போது, மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், வழிபாடு மேற்கொள்கின்றனர். நேற்று, மேட்டுபாளையம் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE