ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பீமன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் லோகிதாசன், 47; ஆட்டோ ஒட்டுனர். இவர், அதே பகுதி செல்வம், 50, என்பவருடன், நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில், ஸ்ரீபெரும்புதுார் பஜார் பகுதிக்கு புறப்பட்டார்.சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார், லோகிதாசன் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், லோகிதாசன் பலியானார்.செல்வம், பலத்த காயங்களுடன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE