தாம்பரம் - வெவ்வேறு இடங்களில், ரயில்களில் அடிபட்டு, பெண் உட்பட இருவர் பலியாகினர்.சென்னை அடுத்த வண்டலுார், லோகாம்பாள் தெருவைச் சேர்ந்தவர், முத்து, 57. இவர், நேற்று காலை, கிண்டி சென்றுவிட்டு, வண்டலுார் திரும்பினார்.பெருங்களத்துார், இரணியம்மன் கோவில் எதிரே, காலை, 9:30 மணியளவில், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற, மின்சார ரயிலில் அடிபட்டு பலியானார். கூடுவாஞ்சேரி, ஜே.பி.நகரைச் சேர்ந்தவர், தாமோதரன், 75. இவர், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் எதிரே, ஏரிக்கரையை ஒட்டி, நேற்று காலை, 11:30 மணியளவில், இயற்கை உபாதை கழித்து, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, எதிரே வந்த ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும், தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE