புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், டில்லி, கர்நாடக, ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. டில்லியில் டிச.,31, ஜன.,1ல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாகவும், பிரிட்டனில் அதிக வீரியம் கொண்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:
டிச., 31, ஜன.,1 நாட்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த நேரங்களில், பொது இடங்களில் கூடி புத்தாண்டை கொண்டாட, வாழ்த்து தெரிவிக்க, கூட்டமாக கூடக்கூடாது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE