அம்மாபேட்டை: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில், பா.ம.க.,வினர் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, அனைத்து யூனியன் அலுவலகங்களிலும், மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, பவானி-மேட்டூர் சாலையில், 300க்கும் மேற்பட்ட, பா.ம.க.,வினர் வன்னியர்களுக்கு, 20 சதவீதம் இடஒதுக்கிடு கேட்டு, அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பி.டி.ஓ.,விடம் மனு வழங்கினர். இதே போல் பவானி, அந்தியூர் யூனியன் அலுவலகம் முன், பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* மொடக்குறிச்சியில், பா.ம.க.,வினர் நால் ரோட்டில் இருந்து, பேரணியாக சென்று பி.டி.ஓ. சுசீலாவிடம் மனு வழங்கினர். இதே போல் கொடுமுடி யூனியன் அலுவலகத்திலும், பி.டி.ஓ.,விடம் மனு வழங்கினர். பா.ம.க., மாநில துணைத்தலைவர் வடிவேல் ராமன், நல்லசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* மாநில துணை பொதுச்செயலாளர், பரமேஸ்வரன் தலைமையில், ஈரோடு தாசில்தார் பரிமளாதேவியிடமும், மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE