ஈரோடு: ஈரோட்டில், கோவில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த, நான்கு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பழையபாளையம் ஓடைமேட்டில் உள்ளது மதுரை வீரன், சக்தி மாரியம்மன் கோவில். நேற்று முன்தினம் இரவு, கோவில் பூட்டை திறந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரு உண்டியல்களை உடைத்து, அதிலிருந்த, நான்கு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். காலையில் கோவில் கதவு திறந்து இருந்ததுடன், பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 70 குடும்பங்களுக்கு சொந்தமான கோவில் இது. கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, உண்டியல் பணத்தை எடுக்கவில்லை; சேமித்து வைத்திருந்தனர். பணம் மட்டும் கொள்ளை போய் உள்ளது. பீரோ, அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை, மர்ம நபர்கள் எடுக்கவில்லை. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE