வாழப்பாடி: வாழப்பாடி, பழனியாபுரம், காட்டுக்கொட்டாயை சேர்ந்த விவசாயி கண்ணன், 30. இவரது உறவினர், அதே பகுதியை சேர்ந்த ரத்தினம், 65. இவர்கள் இடையே, நிலத்தகராறால், முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை, கண்ணனின் தாய் சரோஜா, 55, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது, வாய்க்காலில் இருந்த கல்லை, ரத்தினம் அகற்றியுள்ளார். இதை தட்டிக்கேட்ட சரோஜா, அவரது மருமகள் சாந்தி, 26, ஆகியோரை, ரத்தினம், அவரது மகன்கள் பாலாஜி, கருப்பண்ணன் ஆகியோர் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சரோஜா, சாந்தி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாந்தி புகார்படி, ரத்தினம், பாலாஜியை, நேற்று கைது செய்த, வாழப்பாடி போலீசார், கருப்பண்ணனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE